Sunday 2 June 2013


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. தமிழகத்தில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக, இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்படுகின்றன. 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், பள்ளிகள் இல்லாத இடங்களில், புதிதாக, 54 துவக்கப் பள்ளிகள் துவக்கவும் அரசு முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.

No comments:

Post a Comment