அரசு நிர்வாகம்!
அரசு நிர்வாகம்!
நமது அரசு நிர்வாகத்தில் சில விஷயங்கள் எவ்வளவு தாமதமாக நடக்கிறது என்பதற்கு இந்தத் தகவலைப் படிங்க...
இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக இருந்தார். அவருக்கான சுருட்டு செய்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து புகையிலை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென தனியாகப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து, இந்தியா சுதந்திரமும் அடைந்து, வின்ஸ்டன் சர்ச்சில் 1965-ல் இறந்த பிறகும், துணை ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் அந்தப் படிவங்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன. 1972-ல் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை எடுத்தபோதுதான் சுருட்டுக்கான படிவம் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.
...See More
No comments:
Post a Comment