Wednesday 26 December 2012



8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ்

பள்ளியில் முறையாக கல்வி கற்காமல் நேரடியாக 8ம் வகுப்பு எழுதுவோருக்கு "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்" பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் பணிமுடித்து 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - SSLC மார்ச்- 2013 பொதுத் தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும் செலுத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறையில் 2013 பொதுத் தேர்வுகள் எழுதும் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள் அமைத்தல் சார்பாக அறிவுரைகள் வழங்கி தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவு.

Class X - Supplementary Examination Results - October 2012

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices


Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(October- 2012)

Chennai-4 (Professional & Executive)AriyalurChennai-4 (Technical Personnel)
Chennai-4Chennai-35 (Unskilled)Coimbatore
Coimbatore (Technical Personnel)Chennai-4 (Physically Handicapped)Dindigul

பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் வானவியல் வகுப்பு

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வானவியல் குறித்த 3 நாள் குளிர்கால வகுப்பு நடைபெற உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் காத்திருப்பு.

முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் கோப்பு, இரு வாரங்களாக, முதல்வர் அலுவலகத்தில் காத்திருக்கிறது.

விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை

கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக் காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்லலாம்?

மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 2013ம் கல்வியாண்டு முதல் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வு, 2013, மே 5ம் தேதி நடத்தப்படவுள்ளது.

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இரட்டைபட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டம் தயார்

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, டிஸ்மிஸ் செய்வதற்கு, கல்வித்துறையும் முடிவு செய்துள்ளன.

தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர் மற்றும் முழு மதிப்பீட்டு (சி.சி.இ) முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

பள்ளிக் கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர் பணியிடம் விரைவில் நியமனம்

பள்ளி கல்வித்துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், ஆன்-லைன் கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர்.

விலையில்லா லேப்-டாப் விற்பவர், வாங்குபவர் மீது கடுமையான நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

தமிழக அரசால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா லேப்-டாப்கள் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விற்கும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான 21 அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 26.12.2012 அன்று நடத்துதல் சார்பு

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது

உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பான புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் பதிய உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்வு - ஆங்கிலம் முதல் தாளில் குழப்பம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்விற்கான, ஆங்கிலம் முதல் தாளில் இரண்டு கேள்விகள் இடம் பெறாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. நேற்று நடந்த, ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், 42 மற்றும் 45 எண்களுக்கான

கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது!

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது" என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. 8ம் வகுப்பு தேர்வு, நேரடியாக, தனி தேர்வாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

ஒரு பள்ளி , ஓர் ஆசிரியர் , 120 மாணவர்கள் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவு.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி

திட்டமிட்ட செயல்பாடு - அதிக மதிப்பெண்கள்

ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ, அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப்படும். எப்படி படிக்கிறோமோ, அதை வைத்தே நமது மதிப்பெண்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற, எப்படி சிறப்பாக படிக்கலாம் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

Thursday 20 December 2012

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 

முதல் பக்கம் » பகவத்கீதை
கீதாச்சாரம்!
செப்டம்பர் 29,2011
  
அ-
+
Temple images
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்
Share  
Bookmark and Share

கீதாச்சாரம்!
செப்டம்பர் 29,2011
  
அ-
+
Temple images
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்

இன்றைய காலண்டர்
டிசம்பர்
20
வியாழன்இன்றைய காலண்டர்
டிசம்பர்
20
வியாழன்
நந்தன வருடம் - மார்கழி
5
ஸபர் 6
நந்தன வருடம் - மார்கழி
5
ஸபர் 6
மேலும்...நாளை »


தொடக்கக்கல்வி - 2013 - 14ஆம் கல்வியாண்டில் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்பாக 28.12.2012க்குள் கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு.
Source : www.tnkalvi.com

பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 75 டி.இ.ஓ.,கள் பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் : இயக்குனர் தகவல்
Source : http://www.tnkalvi.com/
CPS திட்டம் புதிதாக நியமனமாகும் ஊழியர்களுக்கு மட்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய ஊழியர்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதற்கான சட்டப்பிரிவுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டமுன்வரைவில் உள்ளன. 
Source : www.tnkalvi.com
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு புதிதாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கி… http://t.co/Tf2Ojm


தூக்கி விட்ட நம்பிக்கை: சிறுகதை - புலேந்திரன்

நீலகிரி மலையில் வாழும் மான்குட்டி மாலுவுக்கு பிறந்தநாள் விழா. பக்கத்து மலையில் உள்ள முயல்குட்டி முத்து, கரடிக்குட்டி கருப்பன், பூனைக்குட்டி மீனு ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தது மாலு.

வீட்டிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிட்டது முயல்குட்டி முத்து. பாட்டுப் பாடிக்கொண்டே ஜாலியாக போய் கொண்டிருந்தபோது பாசி படர்ந்திருந்த பாறையில் கால் வைத்து வழுக்கி குழிக்குள் விழுந்தது முத்து. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. பயத்தில் முத்துவின் இதயம் 'லப்டப்' 'லப்டப்' என்று மிக வேகமாக துடித்தது. யாராவது வந்து உதவி செய்வார்கள் என்ற நினைப்பில் குழிக்குள்ளேயே படுத்திருந்தது. ஆனால், யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியில் செல்பவர்கள் எல்லாம் முத்துவை பரிதாபமாக பார்த்து விட்டு சென்றுவிட்டனர்.
...Continue Reading
தூக்கி விட்ட நம்பிக்கை: சிறுகதை - புலேந்திரன்
 
நீலகிரி மலையில் வாழும் மான்குட்டி மாலுவுக்கு பிறந்தநாள் விழா. பக்கத்து மலையில் உள்ள முயல்குட்டி முத்து, கரடிக்குட்டி கருப்பன், பூனைக்குட்டி மீனு ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தது மாலு.

வீட்டிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிட்டது முயல்குட்டி முத்து. பாட்டுப் பாடிக்கொண்டே ஜாலியாக போய் கொண்டிருந்தபோது பாசி படர்ந்திருந்த பாறையில் கால் வைத்து வழுக்கி குழிக்குள் விழுந்தது முத்து. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. பயத்தில் முத்துவின் இதயம் 'லப்டப்' 'லப்டப்' என்று மிக வேகமாக துடித்தது. யாராவது வந்து உதவி செய்வார்கள் என்ற நினைப்பில் குழிக்குள்ளேயே படுத்திருந்தது. ஆனால், யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியில் செல்பவர்கள் எல்லாம் முத்துவை பரிதாபமாக பார்த்து விட்டு சென்றுவிட்டனர்.

'சரி, யாரிடமாவது நாமே உதவி கேட்கலாம்' என்று எண்ணிய முத்து தலையை சற்று உயர்த்தி நோட்டமிட்டது. அதன் கண்ணில் நரி தென்பட்டது.

"குழிக்குள் விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். எழ முடியவில்லை... என்னை தூக்கிவிடு" என்றது முத்து.

"என் கை சுளுக்கி விட்டது. கையைக்கூட நீட்ட முடியவில்லை. வேறு யாரையாவது பார்..." என்று சொல்லிவிட்டு நடையை கட்டியது நரி.

சற்று நேரத்தில் யானை வந்து குழியை எட்டிப் பார்த்தது.

"அண்ணே, என்னை மேலே தூக்கி விடுங்க. ப்ளீஸ்!" என கெஞ்சியது முத்து.

"என் துதிக்கையில் முள் குத்திவிட்டதுடா தம்பி! என்னால் எதுவுமே செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு யானையும் போய்விட்டது.

உதவி செய்ய மனமில்லாத அந்த விலங்கு களின் மீது முத்துவுக்கு வெறுப்பு உண்டானது.

'இனி என்ன செய்வது?' என்று சிந்தனையில் முத்து ஆழ்ந்திருந்தபோது, "விழுந்துட்டியா..?" என்றொரு குரல் கேட்டு தலையை தூக்கிப் பார்த்தது முத்து.

மேலே கரடிக்குட்டி கருப்பன் நின்று கொண்டிருந்தது.

"மாலுவோட பிறந்தநாள் விழாவுக்கு போறப்பத்தான் கால் வழுக்கி குழிக்குள் விழுந்துட்டேன். என்னை தூக்கிவிடு" என்றது முத்து.

"எனக்கொரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து உன்னை தூக்கி விடுகிறேன். அதுவரைக்கும் குழிக்குள்ளேயே இரு" என்று சொல்லிவிட்டு கரடிக்குட்டியும் 'எஸ்கேப்' ஆகிவிட்டது!

நேரம் கடந்து கொண்டேயிருந்தது.

'கருப்பனை காணவில்லையே. விழா ஆரம்பிக்க இன்னமும் அரை மணிநேரம்தானே இருக்கு...' என்று புலம்பியது முத்து.

அப்போது அங்கு வந்த பூனைக்குட்டி மீனு, குழிக்குள் எட்டிப் பார்த்தது.

"கால் வழுக்கி குழிக்குள்ளே விழுந்துட்டேன். எல்லார்கிட்டேயும் உதவி கேட்டேன். யாருமே உதவி செய்யலே. கரடிக்குட்டிகூட உதவி செய்யாமல் ஓடிப்போயிட்டான்" என்று வருத்தத்துடன் மீனுவிடம் சொன்னது முத்து.

"விழுந்தால் என்ன..? எழுந்திடலாம். உன் உடம்பில் இன்னும் சக்தி இருக்கு. நீயே முயற்சி செய். உன்னால் கண்டிப்பாக முடியும்" என்று நம்பிக்கை கொடுத்தது மீனு.

"அப்படியா, என்னால் முடியுமா?" ஆச்சரியத்துடன் கேட்டது முத்து.

"மற்றவரின் உதவிக்காக காத்திருக்கக் கூடாது. உடல் பலத்தை விடவும் உள்ளத்தின் பலமே பெரியது. மூடப்பட்ட விதை, மண்ணை கீறிக் கொண்டு முண்டியடித்து மேலே வருகிறதே! அதுபோல் நீயும் முயற்சி செய். மேலே வந்துவிடுவாய்" என்று முத்துவை இன்னும் ஊக்கப்படுத்தியது மீனு.

மீனுவின் வார்த்தைகளால் உற்சாகமடைந்த முத்து, முழுமையாக முயற்சி செய்தது. சில நிமிடங்களில் மேலே வந்து சேர்ந்தது.

"கெட்டிக்காரன்! மேலே வந்து விட்டாயே..." சிரித்துக்கொண்டே சொன்னது மீனு.

"நீ நம்பிக்கை ஊட்டியதால்தான் என் மனதுக்கே தெம்பு வந்தது. உன் வார்த்தைகளால்தான் நான் மேலே வந்தேன்" என்றது முத்து. பின்னர் இருவரும் உற்சாகமாக விழாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

விழா ஆரம்பமானது. மாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு விருந்து சாப்பிட்டனர். மீனுவும், முத்துவும் வீடு திரும்பினர். அப்போது பரபரப்புடன் ஓடி வந்தது கரடிக்குட்டி கருப்பன். வழியில் வந்து கொண்டிருந்த முத்துவை அதிர்ச்சியுடன் பார்த்தது.

"உன்னை மேலே தூக்கிவிட்டது யார்?" என்று கேட்டது கரடிக்குட்டி.

"என் தன்னம்பிக்கைதான். இந்த மீனு சொன்னதைக் கேட்டு என் மீது எனக்கே நம்பிக்கை உண்டானது. ஒரே தாவலில் மேலே வந்துவிட்டேன்" என்றது முத்து. "அப்படியா..." என்று வியந்தது கருப்பன்.

"இனி வழியில் செல்லும்போது எங்காவது வழுக்கி விழுந்துவிட்டால் என்ன செய்வாய்?" என்றது மீனு.

"உதவிக்காக காத்திருக்கமாட்டேன். இரத்தம் ஒழுகினாலும் துடைத்துக் கொண்டே எழுந்து விடுவேன்" என்று சொல்லிவிட்டு கம்பீரமாகச் சென்றது முத்து.

- சுட்டி விகடன் 16-03-08


நம்பிக்கை - ஒரு சுட்டியின் குட்டிக் கதை

மதிக்குமார் வழக்கம்போல் வகுப்புக்கு வந்தான். வாடிய முகம், கசங்கிய சீருடை, கைகளில் புத்தகப் பை மட்டும் இருந்தது. சக மாணவர்கள் ஓடிவந்தனர். "எங்கேடா மதிய உணவு?" என்று கேட்டனர். மௌனமாக இருந்த மதிக்குமார் சற்று நிமிர்ந்து, "நேரமாயிடுச்சுடா" என்று லேசான புன்முறுவலுடன் கூறினான். சிறிது நேரத்தில் வகுப்புகள் துவங்கின. தமிழாசிரியை 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' எனும் குறளை விளக்க, மீண்டும் வீட்டின் சூழலுக்குச் சென்றான் மதிக்குமார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத தாயையும், தந்தையையும் நினைத்து வகுப்பறையின் சன்னல் வழியாக பார்வையில் லயித்துப் போனான். மனமோ, கட்டட வேலைக்குச் செல்லும் எதிர் வீட்டு மாமா குடும்பத்தில் நின்றது. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த மாமாவுக்கு அந்த அத்தை தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கும் விதம்; அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு; அவர்கள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிச் சிரித்து அகமகிழும் காட்சி... அடடா! இவைகள் ஏன் இல்லாமல் போனது... காவல் ஆய்வாளரையும் கல்லூரி ஆசிரியையும் க...See More
நம்பிக்கை - ஒரு சுட்டியின் குட்டிக் கதை

மதிக்குமார் வழக்கம்போல் வகுப்புக்கு வந்தான். வாடிய முகம், கசங்கிய சீருடை, கைகளில் புத்தகப் பை மட்டும் இருந்தது. சக மாணவர்கள் ஓடிவந்தனர். "எங்கேடா மதிய உணவு?" என்று கேட்டனர். மௌனமாக இருந்த மதிக்குமார் சற்று நிமிர்ந்து, "நேரமாயிடுச்சுடா" என்று லேசான புன்முறுவலுடன் கூறினான். சிறிது நேரத்தில் வகுப்புகள் துவங்கின. தமிழாசிரியை 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' எனும் குறளை விளக்க, மீண்டும் வீட்டின் சூழலுக்குச் சென்றான் மதிக்குமார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத தாயையும், தந்தையையும் நினைத்து வகுப்பறையின் சன்னல் வழியாக பார்வையில் லயித்துப் போனான். மனமோ, கட்டட வேலைக்குச் செல்லும் எதிர் வீட்டு மாமா குடும்பத்தில் நின்றது. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த மாமாவுக்கு அந்த அத்தை தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கும் விதம்; அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு; அவர்கள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிச் சிரித்து அகமகிழும் காட்சி... அடடா! இவைகள் ஏன் இல்லாமல் போனது... காவல் ஆய்வாளரையும் கல்லூரி ஆசிரியையும் கொண்ட என் குடும்பத்தில்..? 

சேவல் ஒன்றின் குதூகல சத்தம் அவனது மன நினைவை மாற்ற, அங்கே ஓர் அரிசி மணியைக் கண்ட சேவல், கோழி ஒன்றைக் கூவி அழைத்து தருவதைக் கண்டான். மதிக்குமாருக்கு பசி மயக்கத்துக்கு இடையிலும்... தனது இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது.

- மு.நவீனா, 
அரசினர் மேல்நிலைப் பள்ளி, 
அரிமளம்

Chutti Vikatan added a new photo.
Photo
Like ·  ·  · 9 hours ago · 

"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா ...