Tuesday 27 August 2024

PG NEET Exam 2024 - Results வெளியீடு

  2024 - Results வெளியீடு

PG NEET Exam 2024 - Results வெளியீடு

 



 முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், முடிவுகள் ஆக.,22ம் தேதி வெளியிடப்பட்டன.

நாடு முழுதும் அரசு, சுயநிதி கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழகத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் உட்பட, நாடு முழுதும் 2.3 லட்சம் பேர் எழுதினர்.

முறைகேடுகளை தடுக்க, கடந்த 11ம் தேதி இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பிற் கான நீட் தேர்வு முடிவுகள், ஆக.,22ம் தேதி இரவு, www.natboard.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்தாண்டில், 17 நாட்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்தாண்டு இரண்டு வாரத்தில், ரிசல்ட் வெளியிடப்பட்டு உள்ளது. பொது பிரிவினருக்கு 50 விகிதம்; பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 45; பட்டியலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40 விகிதமாக தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

கடந்தாண்டுகளில், அந்தந்த பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்தாண்டு விகிதாச்சார முறையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் மாநில மற்றும் அகில இந்திய இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கும் என, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது

GATE Exam 2025 - கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங

 GATE Exam 2025 - கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங

 

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற அல்லது சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற எழுத வேண்டிய முக்கிய தேர்வு, 'கேட்' எனும் 'கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்'.

முக்கியத்துவம்


கேட் தேர்வு அடிப்படையில் எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் - ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் -ஐ.ஐ.டி., இணைந்து நடத்துகின்றன. கேட் 2025 தேர்வை ஐ.ஐ.டி.,-ரூர்க்கி நடத்துகிறது.

தகுதிகள்


கேட்-2025 தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.

தாள்கள்


கேட் தேர்வு, 30 வெவ்வேறு துறைகளுக்கு நடத்தப்படுகிறது. ஒருவர், ஒன்று அல்லது இரண்டு தாள்களை எழுத விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை


ஆன்லைன் வாயிலாக பல அமர்வுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 30 வெவ்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் இத்தேர்வில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பொறியியல் துறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 65 கேள்விகள் கேட்கப்படும். 'மல்டிபில் சாய்ஸ்' கேள்விகள் மற்றும் 'நிமெரிக்கல் ஆன்சர்' வடிவம் ஆகிய இரண்டு முறைகளில் கேள்விகள் இடம்பெறும். தேர்வு மதிப்பெண் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

தேர்வு கட்டணம்


ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 26 தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும். தாமதமாக அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் ரூ. 2,300 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.900 செலுத்தினால் போதுமானது. தாமதமாக செலுத்தினால் ரூ.1400.

தேர்வு நடைபெறும் தேதிகள்:

2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 26
விபரங்களுக்கு:
https://gate2025.iitr.ac.in

UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில் 0 comments

 UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்


மத்திய அரசால் 01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்


Click Here to Download - UPS - Unified Pension Scheme - Important Points - Pdf

NILP - எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

 NILP - எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

IMG_20240827_074341

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

065 - 01.09.2024 to 08.09.2024  LITERACY WEEK EVENT Proceedings👇👇👇👇

Download Here

சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம்

 சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவ

madurai%20high

பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்தது தொடா்பான வழக்கில், பள்ளிக் கல்வி இயக்குநா், செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

தமிழக பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக கருதப்படும் என பள்ளிக் 

கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பாணை வெளியிட்டாா். இதன் அடிப்படையில், சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு மாணவா்களும், ஆசிரியா்களும் வருகை தருகின்றனா்.

பள்ளி வேலை நாள்களை அதிகரிப்பது, குறைப்பது, விடுமுறை நாளாக அறிவிப்பது ஆகியவை தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவாகும். இதன்படி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் கிடையாது.

வாரத்தில் ஆறு நாள்களும் வேலை நாள்களாக இருப்பதால், ஆசிரியா்கள், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனா். அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம் 2009-இன்படி, மாணவா்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனா். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளனா்.

இவா்களுக்கு பள்ளிக் கல்வியில் குறைந்த நாள்களே வேலை நாள்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வி இயக்குநா் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவா் யாரையும் கலந்தாலோசிக்காமல், 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்து, தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளாா்.

அவரது இந்த அறிவிப்புக்கு ஆசிரியா்கள் சங்கங்கள் கடும் எதிா்ப்பை ஏற்கெனவே பதிவு செய்தன. இதற்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வெளியிட்ட வேலை நாள்கள் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமாா், இந்த வழக்கு குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநா், செயலா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

குரங்கு அம்மை நோய் கொரோனா போல பெருந்தொற்றாக மாறுமா?: உலக சுகாதார அமைப்பு விளக்கம

 குரங்கு அம்மை நோய் கொரோனா போல பெருந்தொற்றாக மாறுமா?: உலக சுகாதார அமைப்பு விளக்கம

https://jionews.com/share/summary/66c5767022fe1608a6607281

Monday 26 August 2024

Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்?

Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்? கிடைத்தது புதிய ஆதாரம்; அசத்தல் விபரம் உள்ளே.!
http://dhunt.in/Wh4l2

By லேட்டஸ்ட்லி via Dailyhunt

Saturday 24 August 2024

UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

 UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

https://way2.co/MTM5MzQwMDQ=/96_lng2

இலக்கிய மன்ற செயல்பாடுகள் 2024 - 2025 செயல்படுத்துதல் | பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 இலக்கிய மன்ற செயல்பாடுகள் 2024 - 2025 செயல்படுத்துதல் | பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

இலக்கிய மன்ற செயல்பாடுகள் 2024 - 2025 செயல்படுத்துதல் | பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20240822_110607

பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் மற்றும் போட்டிகள் . 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியாண்டு நாள்காட்டியில் மன்ற செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கேற்ப ஏப்ரல் 2025 வரை பள்ளி அளவிலான செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் . இம்மன்ற செயல்பாடுகளை ஒவ்வொரு வாரமும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் தலைமையில் திட்டமிட்டு அனைத்து வகுப்பு பிரிவுகளும் விடுபடுதலின்றி பாடத்திற்கேற்பவும் செயல்பாடுகளுக்கேற்பவும் பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட வேண்டும் .

Club Activities 2024-2025 -Reg.pdf👇👇👇

Download Here

அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தர

 அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தர

1299622

குடிநீர், கழிப்பறை வசதி, ஆய்வகவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித் துறையின் பொதுவான செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:


கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 175தொகுதிகளுக்குச் சென்று பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது பல பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், கழிவறைஉள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லாததை நேரில் பார்த்தேன்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்யும்போது, அங்கு வகுப்பறை, சுற்றுச்சுவர் கட்டிடம் தேவையென்றால் உடனடியாக அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தெந்த பள்ளிகளுக்கு என்னென்ன கட்டிடங்கள் கட்டலாம், அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்பதை அரசு திட்டமிடும். களஆய்வின்போது, தரம்உயர்த்தப்பட்ட ஒரு அரசு பள்ளியில் ஆய்வகமே இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


ஒரு பள்ளியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இருக்கிறதா என்பதை முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருந்தால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பைபாதியில் நிறுத்துவதைக் கண்டறிந்து உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் பள்ளிகளை முறையாகப் பார்வையிட்டு ஆய்வுசெய்ய வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் முறையான அனுமதி இல்லாமல் என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட முகாம்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி-மத மோதல்கள் ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


முதல்வரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதுடன் உணவின் தரத்தையும், உணவு காலதாமதமின்றி மாணவர்களைச் சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, சென்னை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பரிசுப்பதிப்புகளாக கொண்டு வரப்பட்டுள்ள ‘மிளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பின் கீழ் ‘சென்னை டு மெட்ராஸ்’ என்ற புகைப்பட ஓவிய நூலையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

SMC Reconstitution - புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் - Step By Step Procedure

SMC Reconstitution - புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் - Step By Step Procedure

Schools SMC Reconstitution 2024 - 26

Guidelines:

1.Number of Parents from Marginalised Communities : Atleast (0.75 * parent members)

2.Number of Female Members Mandated: Atleast (0.5* parent members)

3.Each member should be given their mobile numbers. The same mobile number cannot be added for other members.


உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய கைப்பேசி எண்ணை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு உறுப்பினருக்கு அளித்த கைப்பேசி எண்ணை வேறோரு உறுப்பினருக்கு அளிக்க இயலாது.


Select Member category

Chairperson

Vice Chairperson

HM

Teacher Representative

Parent Members

Local Body Representative

Educationist

Alumni


SMC%20Reconstruction


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்வது எப்படி


Click Here to Download - SMC Reconstitution - EMIS Website Entry - Step By Step Procedure - Pdf

CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தர

 CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தர


 UPSC Exams 2024-25 | Full Schedule

 12th Standard - Quarterly Exam Question Papers 2024 - Answer Keys - Time Table - Download

EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions! 0 comments

 EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions!

 ...

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 ...

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்கக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

 பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்கக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

...

உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது 0 comments

 உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

...

Friday 23 August 2024

TNSED ADMINISTRATORS APP NEW UPDATE - DIRECT LINK AVAILABLE!

 TNSED ADMINISTRATORS APP NEW UPDATE - DIRECT LINK AVAILABLE!


*🌈VERSION 0.2.5


*🌈UPDATED ON 22nd AUGUST


*🌈WHATS NEW?


*🔥Palli Paarvai, OOSC & SIDS Module Changes


👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring

சர்க்கரை எப்படி தயாரிக்கிறார்கள் அரிய காணொளி

 

சர்க்கரை எப்படி தயாரிக்கிறார்கள் அரிய காணொளி

Wednesday 21 August 2024

இரவு 10 மணிக்கு மேல் விழித்திருப்பவரா நீங்கள்?

 இரவு 10 மணிக்கு மேல் விழித்திருப்பவரா நீங்கள்?  

https://way2.co/MTM5MTA0MzI=/99_lng2

தமிழ் கவிஞர்கள் பிறந்த ஊர் பற்றிய தகவல்கள்

✍தமிழ் கவிஞர்கள் பிறந்த ஊர் பற்றிய தகவல்கள்:

✍இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்
✍திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்
✍உ.வே.சா பிறந்த?
உத்தமதானபுரம்
✍பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
✍விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி
✍முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை
✍பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி
✍தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை
✍பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு
✍அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்
✍திரு.வி.க பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)
✍மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி
✍மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்
✍மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்
✍நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து
✍காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்
✍குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
✍வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்
✍ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்
✍மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு
✍அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
✍கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
✍தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு
✍பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை
✍க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை
✍புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
✍அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை
✍அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்
✍வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி
காஸ்திக்கிளியோன்
✍முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்
✍பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்
✍கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி
✍செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
✍கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்
✍சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை
✍சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்
✍இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்
✍பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை
✍கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு
✍பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
சமுத்திரம்
✍மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை
✍மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
✍சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்
✍திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
✍குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்
✍நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்
Join @eetyjobs

Tuesday 20 August 2024

முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

 முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

 IMG_20240820_192307

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது .

Transfer & Promotion Order - Download here

அரசு பள்ளிகளில் படித்து இந்தியாவில் உள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

 அரசு பள்ளிகளில் படித்து இந்தியாவில் உள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவ-மாணவிக…


 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. நீட் மதிப்பெண்களிலும் ஆட்சேபனை எழுப்பப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 30-க்கு மேற…

Share: 

Monday 19 August 2024

 

தேசிய கொடியின் முடிச்சி அவிழ்க்கும் பறவை

எளிய முறை பதியம் போடுதல்

 

எளிய முறை பதியம் போடுதல்

 *1 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் ரூ 80 ஆயிரம் மானியம்! அரசின் அதிரடி திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?*

https://www.thamizhkadal.com/2024/08/1-80.html.

SMC- பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு*

 🔥🅱️   *SMC- பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு*



👇👇 *புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உறுப்பினர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்வது எப்படி?*


https://youtu.be/-ShoihsYxQo?feature=shared


     *✅இந்த பயனுள்ள தகவலை  அனைவருக்கும்  பகிருங்கள்*