Thursday 13 March 2014
Tuesday 11 March 2014
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்: மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்?
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி முடிகிறது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை
மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்க உத்தரவு
தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு
மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் 26ல் இருந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துவங்குகிறது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பது காவல்துறை ஆராயச்சி மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை நடந்த போராட்டங்களில் 2720 போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்துள்ளது எனும் போது அவர்களின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது உண்மை. காரணம்....
Monday 10 March 2014
அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்?
அதிமுக வேட்பாளர் பட்டியலில் சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்ற செய்திகள் வருவதால் முதல்வர் பிரச்சாரம் முடியாத தொகுதிகளின் வேட்பாளர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ்
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள்.
மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தகவல் மேலாண்மை திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
Sunday 9 March 2014
தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் கோவில்
ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் நாள் 'சிதம்பரம் நடராஜர் கோவி'லில் காலையில் நமது தேசிய கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன் பூஜை நடக்கும். பின் அந்தக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித்தட்டில் வைத்து வெளியே எடுத்து வருவார் தீட்சிதர். பிறகு அந்தக் கொடியை சிதம்பரம் நடராஜர் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி நாட்டிற்கு மரியாதை செய்வார்கள்....
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4564&Cat=3
20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு
20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு...http://www.maalaimalar.com/2014/03/09095328/20-over-cricket-rankings-India.html
09-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
09-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
மதுரை அருகே சக்குடி முப்புலிசாமி மாசி களரி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அடக்க வந்த மாடுபிடி வீரர்கள் மீது பாய்கிறது காளை. இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 67 பேர் காயமடைந்தனர்....
http://origin-www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2912&page=3#DKN
மதுரை அருகே சக்குடி முப்புலிசாமி மாசி களரி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அடக்க வந்த மாடுபிடி வீரர்கள் மீது பாய்கிறது காளை. இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 67 பேர் காயமடைந்தனர்....
http://origin-www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2912&page=3#DKN
பள்ளி ஆய்வகத்தில் அணு உற்பத்தியை உருவாக்கி 13 வயது சிறுவன் சாதனை
பள்ளி ஆய்வகத்தில் அணு உற்பத்தியை உருவாக்கி 13 வயது சிறுவன் சாதனை...http://www.maalaimalar.com/2014/03/09103546/13-year-student-builds-nuclear.html
கம்போடியா நாட்டில் நம் தமிழின் தொன்மை"
"கம்போடியா நாட்டில் நம் தமிழின் தொன்மை"
கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு
கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்....See More
கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு
கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்....See More
தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.
இலவச சீருடைக்கு நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்பு நிறுத்தம்
தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இலவச சீருடை திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக, "பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
பெயர் சேர்க்க விண்ணப்பித்தால் 2 வாரத்தில் பூத் சிலிப்: பிரவீன் குமார் தகவல்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர் அனைவருக்கும் 2 வாரத்தில் பூத் சிலிப் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்: 66 மையங்களில் நடக்கிறது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் 5,600 பள்ளிகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 16-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க உத்தரவு
மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
போட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத்தரவு
"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலை - நம் கனவு நனவாகுமா?
நம்மால் ஒரு உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க சுமார் ரூ.20 ஆயிரம் கோடியைத் திரட்ட முடிந்தால், உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தை இந்தியாவில் உருவாக்குவதைப் பற்றி திட்டமிட முடியும் மற்றும் அதன் வெற்றியையும் உறுதிசெய்ய முடியும்.
Saturday 8 March 2014
ஆசிய கோப்பை யாருக்கு? இறுதி போட்டியில் இன்று இலங்கை - பாக். மோதல்
மிர்பூர் : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இலங்கை அணி இன்று மோதுகிறது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ரவுண்ட் ராபின்’ லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. இந்த சுற்றின் முடிவில், இலங்கை அணி 17 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடம் பிடித்தது....
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82532
தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதியை பா.ம.க. விட்டுக் கொடுத்தது
தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதியை பா.ம.க. விட்டுக் கொடுத்தது... http://www.maalaimalar.com/2014/03/07122021/3-Volume-PMK-DMDK-Gave-away.html
08-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறையில் பெண்கள் சாதனை புரிந்து வந்தாலும், குடும்ப சுமைக்காக செங்கற்களை சுமக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=2908#DKN
உலகின் சிறந்த 100 பல்கலை பட்டியலில் இந்தியா இல்லை
வாஷிங்டன்: ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரவரிசை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு தரவரிசை செய்யப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள்
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82476
திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானை சர்வ அலங்காரத்துடன் கொடி மண்டபத்தில் கொடி மரத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு கொடி மரத்துக்கு பால், பன்னீர், திருமஞ்சன பொடி அபிஷேகங்கள் நடைபெற்றது. 8.11 மணிக்கு மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் தீப தூப ஆராதனை நடந்தது.
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4549&cat=3
தாய் இறந்த இடத்தில் சுற்றிய செண்பகராமன் யானை மின்சாரம் பாய்ந்து பலி
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள யானைகள் வறட்சி காலங்களில் உணவு, தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக அடிவார பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுக்கு முன்பு செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை இறந்தது. உடனே யானை கூட்டம் அங்கு முகாமிட்டு பிளிறி கொண்டிருந்தன. வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியடித்தனர். ஆனால், குட்டி யானை அப்பகுதியிலே நீண்ட நாட்களாக முகாமிட்டிருந்தது.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82475
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82475
மங்கல்யான் இன்னும் 200 நாளில் செவ்வாய் கிரகத்தை எட்டும்
மங்கல்யான் இன்னும் 200 நாளில் செவ்வாய் கிரகத்தை எட்டும்
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=82563
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=82563
பெங்களூர் : இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் 1பி வரும் 31ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
பெங்களூர் : இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் 1பி வரும் 31ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கு இரண்டரை நாளுக்கு முன்னதாக கவுன்ட் டவுன் பணி தொடங்கும்.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82512
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82512
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா 15–ந் தேதி பிரசாரம்
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா 15–ந் தேதி பிரசாரம்...http://www.maalaimalar.com/2014/03/08123814/Kallakurichi-Jayalalitha-15-da.html
Subscribe to:
Posts (Atom)