Sunday 2 February 2014

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் 90 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசு பணி வேண்டி 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பதிவு அதிகரித்துள்ளது.

தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

"தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.

Friday 31 January 2014

TNPSC ANNUAL PLANER 2014-2015..DOWNLOAD

ஆசிரியர் தேர்வு வாரியம் - பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி துறையில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை : தமிழக அரசு :
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

INCOME TAX & FORM 16 FORMAT - CORRECTED AS PER RULE 87A

INCOME TAX FORMAT CLICK HERE...

PREPARED BY MR. P.MANIMARAN, B.T.ASST., GHS, P.THOTTIYANKULAM

INCOME TAX & FORM 16 FORMAT CLICK HERE...

PREPARED BY MR. S.MANOHAR, BT.ASST., THIYAGARAJAPURAM, VIRUDHUNAGAR 

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள்

இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும் 60 ஜாதிகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும் போதும், வேலையில் சேரும் போதும் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: வீடுகளுக்கு இனி மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்

வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் இதை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.

உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி

முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது.

அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். கடைசியாக கடந்த 2013 ஜூலை  முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2014 ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.

நிகர வரி செலுத்த வேண்டிய வருமானம் (NET TAXABLE INCOME) ரூபாய் 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு

As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A, where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable income up to 5,00,000/-. For more clarification about this new section under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below:

3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Thursday 30 January 2014

புதிய 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு' பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒருவரே, பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை

''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும், ஆரம்பநிலை சேர்க்கையில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்து உள்ளார்.

அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்பளத்தில் பிடிக்கக் கூடாது : கருவூலங்களுக்கு நிதித்துறை அவசர உத்தரவு

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.முரண்பாடுகளை களைய தமிழக அரசு 3 நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52 அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

முக்கிய அறிவிப்பு I புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய கொடுக்கப்பட்ட காலகெடு 31.01.2014 அன்றுடன் முடிகிறது I கருத்துகளை PFRDAக்கு அவசியம் அனுப்ப வேண்டிய கடிதம் I அனைவரும் இக்கடிதம் படித்து பின் k.sumit@pfrda.org.in என்ற இமெயிலுக்கு அனுப்பவும்

CPS - LETTER SENT TO PFRDA WITHIN 31.01.2014 IN PRESCRIBED FORMAT CLICK HERE...


குறிப்பு : இக்கடிதத்தில் உள்ள Sent e-mail : k.sumit@pfrda.org.in, Last date : 31 January 2014. என்ற விவரத்தை நீக்கிவிடவும்.

எஸ்.ஏ., தேர்வில் குறைந்தபட்சம் 25% மதிப்பெண்கள் தேவை: சி.பி.எஸ்.இ.,

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE கட்டாயமாக்கியுள்ளது.

கணவர் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் தேவையில்லை

கர்நாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ரஷ்மிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு பிறகு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்

அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக 14 சிறப்பு குழுக்களை அமைத்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15ந் தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்; தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த விவரங்களை, பிப்ரவரி 15–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Tuesday 28 January 2014

2014ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

இந்த 2014ம் ஆண்டில், தான் நடத்தும் பலவிதமான பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளுக்கான தேதி விபரங்களை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி.,யின் பல்வேறு தேர்வுகளுக்கான விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. கார்டுக்காகவிண்ணப்பிக்கும்போது, முகவரி

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா  அல்லது  Education cess   கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா  என குழப்பம் நிலவுவதாக அறிய  வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளோம்.
 Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess என தெளிவாக உள்ளது. எனவே Rs.2000 rebate கழித்த பின்னரே Education cess 

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? வன்கொடுமை சட்டம் பாயும்

"தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

"ஊறுகாய், கருவாடு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை புற்றுநோய் வரும்'

ஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் கலந்த உணவை அதிகமாக சாப்பிட்டுவந்தால் இரைப்பை புற்றுநோய் வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்

மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால், அரசு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):
அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.
பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உடனடியாக ஆசிரியர் தகுதித்

Wednesday 22 January 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை விவகாரம், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு: 

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்

தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்டம் வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றோர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 927 பேர் தேர்ச்சி.
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.
சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 475 பேர் தேர்ச்சி.

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வழி கல்வி சான்று பற்றிய விளக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு பி.ஏ. தமிழ், பி.லிட், எம்.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம் பெற்று பி.எட்., பட்டம் பெற்ற தேர்ச்சி அடைந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத் தேவையில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகளின் தற்போதய நிலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள்) ஒருங்கிணைக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.

Tuesday 21 January 2014

ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம்: டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் காமெடி

மதுரையில், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பலர், கல்விச் சான்றிதழ்களில், ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்றிருந்ததால் அதிகாரிகள் நொந்து கொண்டனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் இன்றைய (20.01.14) நிலை குறித்த விரிவான செய்தித் தொகுப்பு...

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250க்கும் மேற்பட்டவழக்குகள்) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தன.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட மேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி இன்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்.