அமெரிக்காவில் வாழும், இந்திய வம்சாவளிப் பெண், 20 - 30 வினாடிகளில், மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை, சார்ஜ் ஏற்றும் கெபாசிட்டர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும், பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
பிரிமியர் தொடருக்கு தடை இல்லை பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம், 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும், அது வணிக நகரமாக செயல்பட்டது என்றும் ... Comments
சென்னை : பொறியியல் படிப்பில் சேர, இந்த ஆண்டு, 2.35 லட்சம் விண்ணப்பங்களை, மாணவர்கள் போட்டாபோட்டி வாங்கிய போதும், மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததால், நேற்று வரை, 1.4 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு, அண்ணா பல்கலையால் பெறப்பட்டுள்ளதாகக் ... Comments (6)
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 54 புதிய ஆரம்ப பள்ளிகளை துவக்கவும், 50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார்.
காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். அவரது சிந்தனையில் உதித்த தெரு விளக்குக்கு நாகை மாவட் டம் தரங்கம்பாடியில்
சென்னையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள், விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது. ஜூன், 2வது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வை நடத்துகிறது.
கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, 28,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, அடுத்த மாதம், 6ம் தேதி மதிப்பெண் தர வரிசை பட்டியல் வெளியிடவும், 18ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.
முயலும் ஆமையும் மீண்டும் தங்களுக்குள் போட்டிவைத்துக்கொள்ள நினைத்து, ஒரு வெளவாலை நடுவராக நியமித்தன. மொட்டை மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி யோசித்த வெளவால் அருகில் இருந்த நதியை சுட்டிக்காட்டி ''இந்த நதியை நீந்திச் சென்று, மலை மேல் உள்ள கொடியைத் தொட வேண்டும்'' என்றது.
முந்திக்கொண்ட முயல், தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து நதியில் குதித்தது. நீரில் தத்தளித்தது. உடனே ஆமை, 'நம் எதிரி எனினும் விலங்காபிமானத்துடன் (அதாங்க மனிதர்களுக்கு மனிதாபிமானம், விலங்குகளுக்கு விலங்காபிமானம்) செயல்படுவோம்’ என நினைத்து முயலைக் காப்பாற்றியது. பிறகு, இரண்டும் மலை மேல் போட்டி போட்டுக்கொண்டு ஏறத் தொடங்கின. அப்போது, தடுமாறிய ஆமைக்கு முயல் உதவியது. இரண்டும் சேர்ந்தே வெற்றிக்கொடியைப் பிடித்தன. ...See More
சென்னைஎம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும். மருத்துவ படிப்பில் சேர 32,050 பேர் விண்ணப்பம் வாங்கி உள்ளனர். ரேங்க் பட்டியல் அடுத்த மாதம் (ஜூன்...
Something informative. This information is useful....... Have U ever heard about LPG cylinder's expiry date....!! Do you know that there is an expiry date (phys...See More