Friday 3 May 2013


Sportsரெய்னா அசத்தல் சதம் : சென்னை அணி அபார வெற்றி :பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி
பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதம் அடித்து அசத்தினார் ரெய்னா. இவரது அதிரடி ஆட்டம் கைகொடுக்க, நேற்று நடந்த லீக்போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்திய சென்னை,
 


Advertisement

15hrs : 25mins ago
பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த மூன்று நாட்களாக, வட மாவட்டங்களில் வன்முறை பரவி வருகிறது. இதில், அரசு பேருந்துகள் தாக்கப்பட்டு வந்த நிலையில்,நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் பாலம் ஒன்றிற்கு, குண்டு வைக்கப்பட்டது. இந்த சம்பவம், வட ...
Comments (68)


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தியது அரசாணை வெளியீடு

அரசாணை எண்.145 நிதித்(படிகள்)துறை நாள்.02.05.2013 - (தமிழில்)  பதிவிறக்கம் செய்ய...

GO.145 FINANCE (ALLOWANCES) DEPARTMENT  DATED.02.05.2013 - ENHANCED DEARNESS ALLOWANCE FROM 72% TO 80% ORDER CLICK HERE...

அரசாணை எண்.146 நிதித்(படிகள்)துறை நாள்.02.05.2013 - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு 

GO.146 FINANCE (ALLOWANCES) DEPARTMENT  DATED.02.05.2013 - Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.01.2013 - Orders


பிளஸ்–2 தேர்வு முடிவை தெரிந்துகொள்ள 4 அரசு இணையதள முகவரிகள் அரசு அறிவிப்பு

பிளஸ்–2 தேர்வு முடிவு 9–ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்று முடிவுகளை தெரிந்துகொள்ள அரசு இணையதள முகவரிகள் 4 அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள்.

Thursday 2 May 2013


பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்

2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது

தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்விவரம் வருமாறு:–
ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை,
25–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும்,மேம்படுத்துதலும் –2,

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

"குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார். சட்டசபையில், நீதி நிர்வாகம், சட்டம்,

அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி குறைந்தபட்ச பென்ஷன் கூட இல்லாத அவல நிலை... புதிய பென்ஷன் திட்டத்தின் கோர முகம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார்.
திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர். 10ம் வகுப்பு வரை படித்த இவர், தையல் தொழில் பயிற்சி முடித்துள்ளார். 1982, ஜூலை, 1ல், குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னழகு நாயக்கனூரில், அங்கன்வாடி பணியாளராக சேர்ந்தார்.கடந்த, 2004ல், நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தையல் ஆசிரியராகவும், 2007 முதல், கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியிலும் பணிபுரிந்த இவர், 2011 பிப்., 28ல், ஓய்வு பெற்றார்.புதிய பென்ஷன் திட்டத்திற்காக, இவரது சம்பளத்தில் மாதந்தோறும், பணம் பிடித்தம் செய்யப்பட்டது. பணி ஓய்வு பெற்ற இவருக்கு, இரு ஆண்டுகளாகியும், இதுவரை பென்ஷன் வரவில்லை.பென்ஷன் தாமதம் மற்றும் தன்னிடம் பிடித்த தொகையையும் திருப்பி வழங்காததால், பணமின்றி சிரமப்பட்ட எலிசபெத், நூறு நாள் வேலை திட்டத்தில் மண் சுமக்கும் வேலை செய்கிறார்.எலிசபெத் கூறியதாவது:
பென்ஷன் கேட்டு, மாநில முதன்மை கணக்காயருக்கு தபால் அனுப்பப்பட்டது. புதிய பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், அரசு முடிவு எடுக்காததால், தபால் திருப்பி அனுப்பப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்துள்ளேன்.தீர்ப்பு வரும் வரை, சாப்பிடாமல் இருக்க முடியாது அல்லவா? இதனால் மாரம்பாடி ஊராட்சியில், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் கூலியால், சாப்பாட்டு பிரச்னை தீர்ந்துள்ளது. பென்ஷன் கிடைத்தாலும், இப்பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்.ஆசிரியராக இருந்த நான், கூலி வேலைக்கு செல்வதால் எந்த சங்கடமும் இல்லை. மன திருப்தியுடன் ஆத்மார்த்தமாக பணி செய்கிறேன். இருந்த போதும், என்னிடம் பிடித்தம் செய்த தொகையை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி தினமலர்குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார். திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர். 10ம்

மா.க.ஆ.ப.நி- 2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த முதற்கட்டமாக மாநில அளவில் பயிற்சி மற்றும் கையேடு வடிவமைப்பு 03.05.2013 அன்று சென்னையில் நடத்த முடிவு.

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்க அரசுக்கு பரிந்துரை

பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தரம், சுத்தம் மதிய உணவில் இல்லை. இதையடுத்து, நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு (ACKNOWLEDGE -MENT) பெறும் வழிமுறைகள்

GO.114 PERSONNEL AND ADMINISTRATIVE REFORMS (A) DEPT DATED.02.08.2006 CLICK HERE...  

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம். அரசு ஆணை எண்: 114 அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.

திறந்தநிலை பல்கலை கல்விக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியாது - Dinamalar

"திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது" என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார். இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்குவதற்கு தமிழக அரசு தடை

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது.

போட்டியை சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி கல்வியை அதிகரிக்க முடிவு

தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்

தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது

கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு நடக்கும் என சூசகமாக கூறப்பட்டது.

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை - பொது மாறுதலுக்கான மாதிரிப் படிவம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று உத்தரவிட்டார். அண்மையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது 80% ஆக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2013 முதல் வழங்கப்படும். இது குறித்து முறையான அரசாணை இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்

Tuesday 30 April 2013


ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை!

பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.

பல் வலியைத் தீர்க்க:

பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.

அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.

பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.

பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.
ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை!

பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட...See More
மே தின வாழ்த்துக்கல்

அறிவிப்பு:

கோடை விடுமுறையில் குதூகலமாக சுற்றுலா செல்வோர் கவனத்துக்கு... சுற்றுலா தலங்களில் நீங்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ அல்லது அழகிய காட்சிகளையோ புகைப்படங்களாக எடுத்து www.facebook.com/ChuttiVikatanபக்கத்தில் Message-ல் இணைத்து அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் புகைப்படங்களும், அதற்கான கமென்டுகளும் சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும். அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்ப விரும்புவோர், chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அவ்வப்போது சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும்.
அறிவிப்பு: 

கோடை விடுமுறையில் குதூகலமாக சுற்றுலா செல்வோர் கவனத்துக்கு... சுற்றுலா தலங்களில் நீங்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ அல்லது அழகிய காட்சிகளையோ புகைப்படங்களாக எடுத்து www.facebook.com/ChuttiVikatan பக்கத்தில் Message-ல் இணைத்து அனுப்பலாம். 

நீங்கள் அனுப்பும் புகைப்படங்களும், அதற்கான கமென்டுகளும் சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும். அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்ப விரும்புவோர், chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அவ்வப்போது சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும்.

புலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்

விஷக்கடி மருத்துவ முறைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம்.

அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது...
...See More
புலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்

விஷக்கடி மருத்துவ முறைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். 

அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது...

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2013/04/blog-post_26.html

.

சித்தர்கள் இராச்சியம் shared a photo.
நெல்லிமுள்ளி கற்பம்

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. "திரிபலா" என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று.  கருநெல்லி, அருநெல்லி என இரு வகை நெல்லிக்காய் உண்டு. இவை வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்காது என்பதால் இவற்றை காய வைத்து வற்றலாக பயன் படுத்துவர். இதனையே "நெல்லிமுள்ளி" என்பர். 

எளிய வகை கற்பங்களின் வரிசையில் இன்று நெல்லிமுள்ளி கற்பம் பற்றிய போகரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த தகவல்கள் போகர்  "போகர் 7000" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. 

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/11/nellimulli.html

.
நெல்லிமுள்ளி கற்பம்

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. "திரிபலா" என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று. கருநெல்லி, அருநெ...See More

News
ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு, அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், ...


தற்போதைய தங்க விலை ( நிமிடந்தோறும் மாறும்)

( நியூயார்க் நேரப்படி 4 மணி நேர இடைவெளியில் )


Sportsவிராத் கோஹ்லிக்கு அர்ஜுனா விருது * பி.சி.சி.ஐ., பரிந்துரை
இந்திய வீரர் விராத் கோஹ்லியின் பெயரை, அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில் ஆர்டர்' வீரரான இவர், இதுவரை 18 டெஸ்ட் (1,175
 
மேலும் படிக்க...

Current events



15hrs : 59mins ago
சென்னை: விழா நடத்த, போலீஸ் விதித்த நிபந்தனைகளை, பா.ம.க., கடைபிடிக்காததால், மரக்காணம் கலவரம் ஏற்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் மீது, தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.மாமல்லபுரத்தில் இம்மாதம் 25ம் தேதி, ...
Comments (30)


வசியக் காப்பு!

வசியம் பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இம்மாதிரி வசியம் மற்றும் வசிய தாயத்துக்கள், வசிய காப்புகளுக்கென எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழிக்க நம்மில் பலர் தயாராக இருக்கின்றனர். இம்மாதிரியான வசிய பொருட்கள் பற்றி பல தகவல்கள் சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல் அகத்தியரின் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது...
...See More
வசியக் காப்பு!

வசியம் பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இம்மாதிரி வசியம் மற்றும் வசிய தாயத்துக்கள், வசிய காப்புகளுக்கென எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழிக்க நம்மில் பலர் தயாராக இருக்கின்றனர். இம்மாதிரியான வசிய பொருட்கள் பற்றி பல தகவல்கள் சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல் அகத்தியரின் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது...

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/08/blog-post_12.html

.