Sunday 1 June 2014

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள்மொபைல்போன் பயன்படுத்த தடை: மீறினால் ஒழுங்கு நடவடிக்கை


பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது,''என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: பாடகால அட்டவணையை ஆசிரியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். நவீன கற்பித்தல் சாதனங்களை பயன்படுத்தி, எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி பாடங்களை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி வகுப்பறைகளில், மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது. மீறினால், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சட்டப்படி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment