Monday 28 January 2013



Temple கோயிலை சுற்றும் போது என்ன நினைக்க வேண்டும்?கோயிலை சுற்றும் போது என்ன நினைக்க வேண்டும்?
கோயிலில் மூன்றுமுறை வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் ஒவ்வொரு பிரார்த்தனையை செய்ய வேண்டும். முதல் சுற்றில் அறிந்தும் அறியாமலும் 
மேலும் படிக்க...


Special Newsஹூஸ்டன் : மஞ்சளை, அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்' என, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் தெரிவித்த                                       மேலும் படிக்க...


Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?
ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).
புதிய ஆசிரியர்கள் பணி சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை என்றாலும், அவர்கள் தொழில் செலுத்தும் அளவு உரிய தொகையை ஊதியமாக பெற்று இருந்தால் அவர்கள் பிப்ரவரி 2013க்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 17.12.2012 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.24,888 மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.15,590 சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதால் 28.02.2013 வரை முறையே ரூ.61,819 மற்றும் ரூ.38,724 வர வாய்ப்புள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.706ம் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.238 செலுத்தவேண்டி இருக்கும்.
தொழில் வரி: 
அரையாண்டு வருமானம்  : 
 21 ,000   வரை                                      : இல்லை       
 21,001  முதல் 30,000 வரை      : ரூ. 94   
30,001 முதல்  45,000  வரை     : ரூ.238  
45,001  முதல் 60,000 வரை     : ரூ.469
60,001 முதல்  75,000 வரை     : ரூ.706
75,001 முதல்                                        :   ரூ. 938     


பட்டதாரி ஆசிரியர்களுக்கு 311 மையங்களில் பிப்ரவரி 1 முதல் பயிற்சி

தமிழகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும் - அதற்கான சில எடுத்துக்காட்டு அரசாணைகள் மற்றும் தெளிவுரை

GO.194 SCHOOL EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR PG TRs REG CLICK HERE...
GO.283 SCHOOL EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR HSS HMs - EXTENDED REG CLICK HERE...
GO. (1D) NO.18 (SCHOOL EDUCATION (E2) DEPARTMENT) DATED.18.01.2013 - M.PHIL., PHD., SECOND INCENTIVE FOR BT & HMs REG - PROC CLICK HERE...
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள்  சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற
அணுகிய போது பல்வேறு தரப்பு பதில்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் நிதிசார்ந்த அரசாணைகளில் பணபலனானது எந்த தேதி முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆனால் இந்த தேதி எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும் குழப்பம் நிலவி வருகிறது. அவ்வாறு குறிப்பிடாதபட்சத்தில் எடுத்துக்காட்டுகளாக சில அரசாணைகள் மூலம் நிறைவேற்றப்பட்ட பணப்பலன்கள் குறித்து ஆராய்வோம்.

Monday 21 January 2013


அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் பள்ளிகளில் ஆசிரியர் பணி

அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமே நியமனம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டம்

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: TNPSCக்கு நீதிமன்றம் உத்தரவு.

தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர்

அகஇ - 2012-13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப் பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை நடத்த உத்தரவு.

SSA - INDUCTION TRAINING MODULE FOR TEACHERS CLICK HERE... 
2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலைஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பு அளிக்கக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வாபஸ் பெற வேண்டும் என

பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது : சி.இ.ஓ. அறிவுரை

பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி., பட்டங்களை சேர்த்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Saturday 12 January 2013


தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க CEOகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல்,