2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை ( 2 ) ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது . இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை ( 2 ) ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.
பார்வை ( 3 ) ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் ( 210 நாட்கள் கற்றல் - கற்பித்தல் , தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் ) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் முதன்மை
திருவள்ளுர் மாவட்டத்தில் வருகை பதிவேட்டை திருத்தி, மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த மோசடியை தொடர்ந்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் வசிப்பவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறை அவற்றை சரி பார்க்கும். வரி செலுத்தியவர் கூடுதல் வரி செலுத்த வேண்டியுள்ளதா? அல்லது ரீபண்ட் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதா? என்பது போன்ற விவரங்களை சரி பார்த்த பின்னர் அந்தந்த நபர்களுக்கு ரீபண்ட் வர வேண்டி இருந்தால் திருப்பி செலுத்தப்படும். இந்த செயல்முறைக்கு முன்னதாக வரி செலுத்துவோர் சரிபார்க்கப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஏனெனில் வருமானவரி தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு.
இந்த எல்லா செயல்முறையும் சரியாக செய்தவர்களுக்கும் இன்னும் ரீபண்ட் தொகை வராமல் இருக்கும். ஜூலை 31-ஆம் தேதி அன்று வருமான வரி தாக்கல் செய்தவருக்கு ரீபண்ட் கிடைத்துவிட்டது ஆனால் அதற்கு முன்கூட்டியே தாக்கல் செய்த எனக்கு ரீபண்ட் கிடைக்கவில்லை என்று புலம்புபவரா நீங்கள்.. உங்களுக்கு ரீபண்ட் கிடைக்காததற்கு கீழ்காணும் விஷயம் கூட காரணமாக இருக்கலாம்.
வருமானவரித்துறை ரீபண்ட் தொகையை திருப்பி செலுத்துவதற்கு சில விஷயங்களை சரி பார்க்கும். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று தான் ரிஸ்க் "மேனேஜ்மென்ட் சிஸ்டம்" (RMS) இந்த RMS சிஸ்டத்தைப் பயன்படுத்தி தான் வருமான வரித்துறை இன்னும் சில நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ITR-களை அடையாளம் காணும். RMS சிஸ்டத்தில் உங்கள் ஐடிஆர் அடையாளம் காணப்பட்டால் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு தகவல் அனுப்பப்படும். இந்த அறிவிப்பை நீங்கள் இ-ஃபைலிங் போர்டல் மூலமாகவும் பார்க்கலாம்.
வருமானவரித் துறையின் RMS போர்டல் உங்கள் ஐடியாரை கண்டறிந்த பிறகு எந்தவித செயலாக்கமும் செய்யப்பட மாட்டாது. அதற்கான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் வரி துறை உங்களுக்கு வருமான வரி அறிவிப்பை வெளியிடலாம்.
வருமானவரித்துறையின் "ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம்" எப்போது உங்கள் ரீபண்ட் செயல்முறையை நிறுத்திவைக்கும்?: வருமானவரித்துறையின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில் அதாவது பல ஆண்டுகளாக வரி கணக்குகளில் போலியான கோரிக்கைகளை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அத்தகைய கோரிக்கைகளை செய்த நபர்களை கைது செய்யும் நோக்கத்துடன் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
வரித் துறையால் பயன்படுத்தப்படும் RMS செயல்முறை முரண்பாடுகளைக் கண்டறிய பல்வேறு தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்கிறது என்று கூறப்படுகிறது.
வருமான வரித்துறையின் இந்த RMS வழக்கத்திற்கு மாறான உரிமை கோரல்களை எளிதில் கண்டுபிடித்து விடும். இதன் மூலம் கூடுதல் ஆய்வு தேவைப்படும் ஐடியார்களை கண்டுபிடித்து விடலாம். இந்த செயல்பாட்டின் கீழ் உங்கள் ஐடிஆர் தேர்ந்தெடுக்கப்படும்போது ரீபண்ட் பெரும் செயல்முறை சற்று தாமதமாகலாம். அப்படியானால் உங்கள் வருமானத்தில் சில விஷயங்களை வருமானவரித்துறை சரி பார்க்க விரும்புகிறது என்று அர்த்தம்.
வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு கிடைத்ததா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?:
அதற்கு முதலில் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் லாகின் செய்து உள்நுழைய வேண்டும். "For Your Action" என்பதன் கீழ் இதுகுறித்த அறிவிப்புகள் இருக்கும்.
இதற்கு உங்களுடைய பதிலை சமர்ப்பிக்க e-Filing portal >>Pending Action >>Worklist>> Response for Refund Confirmation என்பதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வரித் துறை, வரித் திரும்பப் பெறல் செயல்முறையை நிறுத்தி, உங்கள் ITR ஐ மேலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை அடையாளம் காண ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. எனவே ரீபண்ட் பெறுவதற்கு நீங்கள் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், வரித் துறை உங்களுக்கு வருமான வரி அறிவிப்பை வழங்கலாம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழங்கி உள்ள தலைமையாசிரியரின் கையட்டில் உள்ளபடி வகுப்பு ஆசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும் கீழே உள்ள pdf லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொகுத்து வழங்கியவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம்
களஞ்சியம் ஆப் வழியாக விடுப்பு விண்ணப்பித்தல் மற்றும் அனுமதித்தல் சார்ந்த பதிவு.
ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் விடுப்புக்களை களஞ்சியம் மொபைல் ஆப் வழியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட HRMS / c-SR முழுமையாக நடைமுறைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இது ஒர் அடுத்த கட்ட நகர்வு.
தமிழ்நாடு பள்ளிக்
கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 055365/சி2/இ1/2024 நாள் 16.08.24 சார்ந்த ஐயங்களுக்கு சில விளக்கங்கள்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்,” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தையொட்டி, பாஜக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்வினை ஆற்றியுள்ளன.
அமைச்சர் அன்பில் மகேஸ்: ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் உள்ள அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் பேசிய கருத்துகள், மூடநம்பிக்கையை முன்வைத்து சர்ச்சைக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.
மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இதை திட்டமிட்டு யாரோ செய்கின்றனர்? மாநிலக் கல்வித் தரம் குறித்து விமர்சித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கும், அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவுக்கும் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது. அதை அறிந்து, புரிந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுபோன்ற செயல்கள் நடக்கக் கூடாது. இதுபோல சில புல்லுருவிகள் ஆங்காங்கே வருவார்கள். அதை அரசு கவனித்து 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோல இனிமேல் நடக்காமல் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் சிலநேரங்களில் அரசின் கவனத்துக்கு வராமல் கூட நடக்கலாம். அமைச்சரின் பேட்டி மற்றும் துறை செயலரின் கடிதங்களைப் பார்க்கும்போது, இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் எங்கேயும் நடக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
தமிழகம் கல்வியிலே சிறந்து நிற்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் பெற்றிருக்கிறது. இதை ஜீரணிக்க முடியாத சில சக்திகள், இதைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். பெரியார் பிறந்த, அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட, கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட, முதல்வர் ஸ்டாலினால் தலைமைத் தாங்கி நடத்தப்படுகிற இந்த மண்ணில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள், தவறான கருத்துகள் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிக: மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக் கல்வித் துறை முயல்வது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்வு நடத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ள கருத்து அவரை விட வயதில் சிறியவரான மகாவிஷ்ணு கொண்டுள்ள முதிர்ச்சி கூட அமைச்சருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு ரவுடி பேசுவதைப் போல அமைச்சர், மகா விஷ்ணுவுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். இது கண்டிக்கதக்கது.
கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவாகரத்தை அணுகுகின்றனர். இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் எதிரானது. திமுக அரசு ஆன்மிக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது. இதற்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள், இந்து மதமும் அஞ்சாது,” என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ‘பரம்பொருள் பவுண்டேசன்’ என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் சனாதன கருத்துகளை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கி பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியர் மிரட்டப்பட்டுள்ளார். இதே சொற்பொழிவாளர் மாணவிகள் நிறைந்த மற்றொரு பள்ளி நிகழ்வில் பேசும் போது பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
பெண்கள் அழகின்றியும், மாற்றுத் திறனாளிகளாவும் பிறந்து வருகிறார்கள் என்றெல்லாம் பேசி அவமதித்துள்ளார். இந்த பொறுப்பற்ற, மூடத்தனமான பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்த மாணவர் அமைப்புகளின் முறையீடுகள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டுட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் முட நம்பிக்கை கருத்துகளுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் அமைப்புகளின் பயிற்சி களமாகவும் பயன்படுத்தி, இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்: ஆசிரியர் தினத்தில் நடந்த சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்
சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அனுமதி இன்றி நடத்த கூடாது என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட்28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட மகாவிஷ்ணு என்ற தன்னம்பிக்கை பேச்சாளர், பாவ - புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்றும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்றமாற்றுத் திறன் ஆசிரியருடன் மகாவிஷ்ணு வாக்குவாதமும் செய்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாணவர்களை தவறாக வழிநடத்துவதா என கேள்வி எழுப்பி, அசோக் நகர் பள்ளி முன்பு, பல்வேறு மாணவர் அமைப்பினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில், பள்ளிக்கல்வி துறை சார்பில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத் திறன் ஆசிரியர் சங்கருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியபோது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாகபள்ளிக்கல்வி துறை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதுதுறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும். என்னுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அவரை பேச அனுமதித்ததாக கூறுவது தவறான செய்தி’’ என்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு, 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி, திருவள்ளூர் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டுஅணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசோக் நகர் பள்ளி ஆசிரியர்கள் நேற்று மதியம்வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின்தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் அறிந்துகொள்ள தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் உள்ளன. எதிர்கால சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக் கூறமுடியும். அதற்கு தேவையான புத்தாக்க பயிற்சியை துறைசார் வல்லுநர்களை கொண்டு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர, பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறை செய்வதற்கு, புதிய வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூகமேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை: இதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் காணொலியில் உடனடியாக ஆலோசனை நடத்தினார். ‘‘பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து இயங்குபவர்களாக இருக்க வேண்டும். துறை அனுமதியின்றி தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பயிற்சி முகாம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. சுற்றறிக்கைகூட சரியாக தயாரிக்க தெரியாத சிலரால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை 3 நாட்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் முறையான அனுமதி இன்றி நடத்த கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதியும் உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையில் புகார்: இதற்கிடையே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுக்கப்பட்ட
கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வரும் நேரத்தில் கூகுள் (Google) நிறுவனமானது, கூகுள் டிவி ஸ்ட்ரீமர் (Google TV Streamer) பாக்ஸை களமிறக்கி இருக்கிறது. நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் தொடங்கி 800+ லைவ் டிவி சேனல்கள் வரையில் கொடுப்பது மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன், டால்பி விஷன், கேமரா கன்ட்ரோல், வாய்ஸ் ரிமோட் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் குறித்த விவரம் இதோ.
கூகுள் டிவி ஸ்ட்ரீமர் அம்சங்கள் (Google TV Streamer Specifications):
இந்த ஸ்ட்ரீமர் மூலம் 4K எச்டிஆர் ரெசொலூஷனில் வீடியோக்களை பார்க்க முடியும். டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற அல்ட்ரா பிரீமியம் வீடியோ பீச்சர்களை கொண்டுள்ளது. ஆடியோவிலும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் உள்ளது.
மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. ஆகவே, ஓடிடி, டிவி சேனல்கள் என்று எதையும் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் வீடியோ தரத்தில் பார்த்து கொள்ளலாம். இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வருகிறது. வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
அதேபோல எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி-சி (USB-C) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டியும் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது. ஸ்மார்ட் ஹோம் கனெக்டிவிட்டி (Smart Home Connectivity) வருகிறது. ஆகவே, ஸ்மார்ட் கேமரா, லைட் மற்றும் டெப்ரேச்சர் டிவைஸ் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். அதேபோல மொபைல், ஸ்பீக்கர் காஸ்ட் செய்து கொள்ளலாம்.வாய்ஸ் ரிமோட் (Voice Remote) வருகிறது. ஆம்பியன்ட் மோட் (Ambient Mode), ஹோம் பேனல் (Home Panel), காஸ்டிங் & குரூபிங் (Casting & Grouping) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) சப்போர்ட் உள்ளது. இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஆப்பிள் டிவி (Apple TV), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல், 800+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஏஐ பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, ஓடிடி ஆப்கள், டிவி சேனல்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் பீச்சர்களையும் இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் பேக் செய்துள்ளது. ஏற்கனவே, ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எல்லோம் ஆப் மூலமே வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.
இப்போது, கூகுள் டிவி ஸ்ட்ரீமரின் வருகை கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ்களுக்கு மேலுமொரு அடியாக விழுந்துவிட்டது. இருப்பினும், இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்டிருப்பதால், சற்று விலையும் அதிகமாகவே இருக்கிறது அதாவது, ரூ.8,390ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. ஹேசல் (Hazel) மற்றும் போர்சிலைன் (Porcelain) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியில் இருந்து ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கூகுள் ஸ்டோர்களில் (Google Store) ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் நாட்களில் மற்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் ஆர்டருக்கு கிடைக்கலாம். பிரீமியம் கஸ்டமர்களுக்கு இது பக்கா தேர்வாக இருக்கும். அதேநேரத்தில் பழைய டிவைஸ்களுக்கு இது மாற்றாக கட்டாயம் இருக்கும்.
டிட்டோஜாக் ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு இயக்கங்கள் சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி அறிக்கை வெளியீடு.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த ஜூன் 9-ம் தேதி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.
தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு , அக்டோபர் - 2024 செய்திக் குறிப்பு :
மாணவ . மாணவியர்கள் அறிவியல் . கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது.
2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் . 2024-2025 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ( மெட்ரிக் / CBSE / ICSE / உட்பட ) மாணவர்கள் . 19.10.2024 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2024 முதல் 19.09.2024 வரை பதிவிறக்கம் செய்து . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 19.09.2024
அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர் துய்க்கும் விடுப்பு விவரங்களை களஞ்சியம் செயலி வாயிலாக உள்ளீடு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - Download Here