அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., - பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது.
எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொலைநிலைக் கல்வி இரண்டாண்டு பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப் பட்டு வருகிறது.