அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புக்கு, ஆன் லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 8ம் தேதி நிறைவடைகிறது.அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளுக்கு, தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இதில்சேர முடியும்.
சுதந்திர தின அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டிக்கு மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்."இந்தியாவில் சுற்றுலா' எனும் தலைப்பில், போட்டியாளர்கள் வடிவமைக்கும் அஞ்சல் தலையானது கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அஞ்சல் தலைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.6000, மூன்றாம் பரிசாக ரூ. 4000 வழங்கப்படும்.
மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
வாஸ்ட்ஆப்பில் வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு என்று ஏதாவது வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள்.
பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறித்துள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி போகும் என எதிர்பார்த்த நிலையில்,வானிலை ஆய்வு மையம் வெப்பம் படிபடியாக குறையும் என தெரிவித்துள்ளதை அடுத்து.வரும் புதன் ஜூன் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
சென்னை :இந்தியாவில் இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 96.21% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.11% குறைவாகும்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்' எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த போட்டியைஏற்படுத்துகிறது.
வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு,90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.
தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு...